நாகை செல்கிறார் தவெக தலைவர் விஜய்… பல்வேறு நிபந்தனைகளுக்கு மத்தியில் பிரசாரம்…
தவெக தலைவர் விஜய் இரண்டாம் கட்ட பிரசாரத்தை மேற்கொள்வதற்காக இன்று நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ‘மக்களுடன் சந்திப்பு’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்குகினார். தொடர்ந்து டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்டம் பிரச்சாரங்களை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், விஜய்யின் பிரசாரத்தின்போது ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும்…
குடியிருப்பு பகுதியில் இயங்கும் ரெஸ்டோ பார் மீது மக்கள் கடும் எதிர்ப்பு – JCM மன்றம் போராட்டம்
பாகூர் தொகுதி குமந்தான்மேடு பகுதியில் குடியிருப்பு சூழலில் நேற்று புதியதாக ரெஸ்டோ பார் துவங்கப்பட்டு உள்ள நிலையில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். JCM மன்ற தலைவர் ரீகன் ஜான் குமார் தலைமையில், ஊர் மக்கள் ஒன்று கூடி அந்த ரெஸ்டோ பார் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த பாரை அகற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.குடியிருப்பு பகுதிக்குள் மது விற்பனை நடைபெறுவது சமூக அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும், இளைஞர்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கை…
புதுவையில் போராடும் ஆசிரியர்களுக்கு LJK ஆதரவு
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆசிரியர்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்த LJK பொதுச்செயலாளர் டாக்டர் துரைசாமி, போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்தார். ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும், இல்லையெனில் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
பனிப்புயல் தாக்குதல் – உருக்குலைந்த அமெரிக்கா
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதிகளை தாக்கிய சக்திவாய்ந்த பனிப்புயல் காரணமாக, வட கரோலினா, தென் கரோலினா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மலைபோல் குவிந்த பனிக் குவியல்களால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்புயல் காரணமாக சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், சில இடங்களில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இந்நிலையில், பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில்…
உடல்நிலை பாதிப்பு – ஆசியர்கள் கவலை
ஆசியர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், போதிய ஓய்வு மற்றும் உணவு இல்லாத சூழ்நிலையில் பலருக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்துள்ள ஆசியர்கள், இந்த போராட்டம் இன்று 13வது நாளை எட்டியுள்ளதாக கூறுகின்றனர். இந்நிலையில், அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சாதனை புரிந்த இந்திய பெண் வீராங்கனை
இந்திய வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர் மேனன், அமெரிக்காவின் நியூ மெக்சிகோ டீம் ஓபன் தடகள போட்டியில் மகளிர் குண்டு எறிதல் பிரிவில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். மகளிர் குண்டு எறிதல் பிரிவில் பங்கேற்று , முன்னதாக இருந்த 16.03 மீட்டர் சாதனையை முறியடித்து, 16.63 மீட்டர் தூரம் குண்டு எறிந்து புதிய தேசிய சாதனையை பதிவு செய்துள்ளார், இந்திய வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர் மேனன். இந்த சாதனை மூலம் இந்திய விளையாட்டு வரலாற்றில் தனது பெயரை பதித்துள்ள…
இரண்டே வரியில் புதிய அரசியல் வெடியை பற்ற வைத்த விஜய்- விஜய் பரபரப்பு பேச்சு
தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது . இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று பேசியதாவது, தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி இன்று 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளோம். இந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக வளர்ந்துள்ளோம். அதற்கு நீங்களும், கோடிக்கணக்கான மக்களும் தான் காரணம். நீங்கள்தான் எனக்கு பலம். உங்களை நம்பித்தான் நானும் இருக்கிறேன். கட்சியும் இருக்கிறது. கட்சியில் உள்ள தோழர்கள்,…
தங்கம், வெள்ளி விலையில் கடும் ஏற்ற இறக்கம்: இன்றைய நிலவரம்
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சமீப நாட்களாக கடும் ஏற்ற இறக்கங்களுடன் நிலவி வருகின்றன. ஒருநாள் அதிவேகமாக உயர்வதும், அடுத்த சில நாள்களில் திடீரென சரிவதும் என விலை நிலவரம் முதலீட்டாளர்களையும் நகை வாங்குபவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில், கடந்த வியாழக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,190 மற்றும் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,34,400 என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அதே நாளில் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ரூ.425-க்கு…
பிரபல அனிமேஷன் தொடரான ‘அட்டாக் ஆன் டைட்டன்’ யூடியூப்பில் வெளியானது
உலகளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட அனிமேஷன் தொடர்களில் ஒன்றான ‘அட்டாக் ஆன் டைட்டன்’ (Attack on Titan) தற்போது அனைவரும் இலவசமாக பார்க்கும் வகையில் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொடரின் அனைத்து சீசன்களையும் ‘முஸ் ஆசியா’ (Muse Asia) நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. ஜப்பானிய ஆடியோவுடன், ஆங்கில சப்டைட்டில்களும் இணைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் எளிதில் ரசிக்க முடிகிறது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் உள்ள அனிமேஷன் ரசிகர்களுக்கு…
மத்திய பட்ஜெட்டில் LJKவின் திட்டம்
மகளிர் தொழில் மேம்பாட்டிற்காக SHE MART எனும் திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே LJK வின் தேர்தல் வாக்குறுதியான தர்மாம்பாள் வாழ்வியல் மேம்பாட்டுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவை பெண்ணகளின் வாழ்வின் வளர்ச்சிக்கு தர்மாம்பாள் வாழ்வியல் மேம்பாட்டுதிட்டத்தின் கீழ் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை தனது தேர்தல் அறிக்கையில்LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அறிவித்திருந்தார். அதில், புதுவை பெருமை என்ற திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்திட்டத்தின் படி சுய உதவிக் குழு பெண்கள் தயாரிக்கும் பொருட்களை உலக…
‘தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றமில்லை’ – மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
2026–27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். காலை 11 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் உரையில், இந்திய பொருளாதாரம் சீரான வளர்ச்சி பாதையில் முன்னேறி வருவதாக அவர் தெரிவித்தார். பட்ஜெட் உரையின் போது வருமான வரி தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதில், ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வரும் என்றும், திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான…
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஜாக்பாட்: பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
மத்திய பட்ஜெட்டில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRI) ஆதரவான முக்கிய முதலீட்டு அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இதன்படி, இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் தனிநபர்கள் Portfolio Investment Scheme (PIS) மூலம் இந்திய பங்குச் சந்தையில் ஈக்விட்டி முதலீடு செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். தனிநபர் முதலீட்டு வரம்பு தற்போது உள்ள 5% இலிருந்து 10% ஆக உயர்த்தப்பட முன்மொழியப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து NRI முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும் மொத்த முதலீட்டு வரம்பும் 10% இலிருந்து 24% ஆக…
வேலூரில் விஜயின் அடுத்த பிரச்சாரம்?
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய், வேலூரில் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் தனது அடுத்த கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரச்சார நிகழ்ச்சிக்காக தவெக சார்பில் தேவையான அனுமதிகளை பெறும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜயின் இந்த அடுத்த பிரச்சாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள
ஆசிரியர் கோரிக்கைகள்: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு LJK தலைவர் கடிதம்
ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், நியாயமான ஊதியம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் இருப்பதாக குறிப்பிட்டு, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஆசிரியர்களின் நீடித்த கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகள் உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது
கார் மோதி 4 பெண் பக்தர்கள் உயிரிழப்பு
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் பகுதியில், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற 4 பெண் பக்தர்கள் மீது கார் மோதியதில் அவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். கடலூர் மாவட்டம் தொளார் குடிகாடு கிராமத்திலிருந்து சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொழுநோயாளிகள் தினம்: LJK வழங்கிய மனிதநேய உதவி
தொழுநோயாளிகள் தினத்தை ஒட்டி, ரவுத்தன் குப்பம் HRC மையத்தில் தங்கியுள்ள தொழுநோய் பாதித்தவர்களுக்கு உதவும் நோக்கில் LJK அமைப்பின் சார்பில் 200 பேருக்கு போர்வைகள் வழங்கப்பட்டன. இந்த உதவித் திட்டத்தில் LJK மண்டல பொது செயலாளர் ராபர்ட் ஜேசுதாஸ் மற்றும் புதுவை போதகர்கள் ஐக்கியத்தின் தலைவர் Rev. A. பால் ஆகியோர் இணைந்து கலந்து கொண்டு போர்வைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சி மூலம் தொழுநோய் பாதித்தவர்களுக்கு அன்பும் ஆதரவுமாக ஒரு மனிதநேயச் செய்தி வெளிப்படுத்தப்பட்டது.
மஞ்சள் அட்டை குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 விரைவில் – முதல்வர் ரங்கசாமி
மஞ்சள் அட்டை பெற்ற குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.மேலும், முதியோர் ஓய்வூதியத்திற்காக விண்ணப்பித்த அனைவருக்கும் விரைவில் ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் பொதுமக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவளித்த LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்
புதுச்சேரி அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள், கவுரவ பட்டதாரி ஆசிரியர்கள், கவுரவ பட்டதாரி மொழி ஆசிரியர்கள், கவுரவ பாலசேவிகாக்கள் என 292 ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி கடந்த 21ம் தேதி முதல் புதுச்சேரி அரசின் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் காலவரையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 8வது நாளாக ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத்தலைவர் ஜோஸ் சார்லஸ்…
LJK தலைவர் உடன் மீனவர் கூட்டமைப்பினர் சந்திப்பு
லட்சிய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் துரைசாமி ஏற்பாட்டில், புதுச்சேரி அனைத்து மீனவர் கூட்மைப்பினர் மற்றும் மீனவர் சமூக பிரதிநிதிகள் கனகசபை, முனைவர் பெரியாண்டி, சந்திரன், சுப்பிரமணியன், உள்ளிட்ட நிர்வாகிகள் லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத்தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களை சந்தித்து பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பின் போது, மீனவர் சமூகத்தின் கல்வி, வாழ்வாதாரம், பாதுகாப்பு மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பான பல முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அவை வருமாறு:மீனவர் சமூகத்தினருக்கான…
மருத்துவ உபகரணங்களை வழங்கிய L J K தலைவர்
JCM மக்கள் மன்றம் சார்பில் முதியோர்கள் மற்றும் முடியாதவர்களுக்கு வீடு தோரும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், JCM மக்கள் மன்றத்தின் மருத்துவ குழுவினருக்கு அல்ட்ரா சவுண்டு, ஐ.எஃ.டி உள்ளிட்ட உயர்ரக மருத்துவ உபகரணங்களை லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கினார். உடன் லட்சிய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் துரைசாமி, மண்டல பொதுச்செயலாளர் சுரேஷ், இணை பொருளாளர் அயூப் கான் ஆகியோர் இருந்தனர்.
LJK தலைவர் உடன் நடிகர் ஆர்யா, இயக்குநர் பா.ரஞ்சித் சந்திப்பு
லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள். சந்திப்பின் போது லட்சிய ஜனநாயக கட்சியின் இணை பொருளாளர் அயூப் கான் உடன் இருந்தார்.
த.வெ.க. செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்: மேடைக்கு வந்த விஜய்க்கு விசில் அடித்து உற்சாக வரவேற்பு
சென்னை: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். அதேபோல், தாங்கள் செயல்படுத்திய மகளிர் நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதாகக் கூறும் ஆளும் கட்சியான தி.மு.க., மீண்டும் வெற்றி பெறும் நம்பிக்கையில் உள்ளது. இதன்…
மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் அமைதி பேரணி – 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் நிறுவனத்தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் மாபெரும் அமைதி பேரணி நடைபெற்று வருகிறது. காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட ரெயின்போ நகர் பூங்காவில் இருந்து தொடங்கிய பேரணியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அங்காளன், சிவசங்கர், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார், பொதுச்செயலாளர்கள் டாக்டர் துரைசாமி, பூக்கடை ரமேஷ், பிரபாகரன், மண்டல பொதுச்செயலாளர்கள் முனைவர் கண்ணபிரான், சுரேஷ், ராபர்ட் ஜேசுதாஸ், விஜய்ராஜ், JCM…
LJK சார்பில் மொழிப்போர் அஞ்சலி மற்றும் வீரவணக்க நடை பயணம்
புதுவையில் நம் உயிரான தமிழை காக்க, உயிரையே கொடுத்த தியாகிகள் நினைவை போற்றும் வகையில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களின் தலைமையில் தமிழ் மொழிப்போர் அஞ்சலி மற்றும் வீரவணக்க நடை பயணம் நடைபெற உள்ளது. இன்று காலை 10 மணி அளவில் காமராஜ் நகர் ரெயின்போ நகர் பார்க் முதல் தொடங்கி வள்ளலார் சாலை, அண்ணா சாலை, ஆனந்தாயின் ஹோட்டல், அஜந்தா சிக்னல், மகாத்மா காந்தி வீதி, சின்ன மணி குண்டு,…
காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறுவதில் என்ன சிக்கல்? – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
பண்டிகை காலங்களில் ரூ.1,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் தமிழக அரசு, காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறுவதில் ஏன் சிரமம் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து அரசிடம் விளக்கம் கோரியது. இந்த வழக்கின் விசாரணையின் போது, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி…
தவெக கட்சிக்கு ‘விசில்’ சின்னம்: தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் தேர்தல் தயாரிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என அவர் தெளிவாக அறிவித்துள்ளதால், வரவிருக்கும் தேர்தலில் நான்கு முனைப் போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், தவெக கட்சிக்கு பொதுச் சின்னம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பொதுச் சின்னமாக…
உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? – ரஷ்யாவுக்கு எதிராக இனி பேச்சுவார்த்தை
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலால் தொடங்கிய போர் மூன்றாவது ஆண்டை கடந்துள்ளது. இந்த நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து சர்வதேச அளவில் மீண்டும் பேச்சுவார்த்தை பேசப்படுகிறது.அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஆகியோருக்கிடையில் சமாதான முயற்சிகள் குறித்து விவாதம் தீவிரமடைந்துள்ளது. போரால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பொருளாதார பாதிப்புகள் உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளன. போர் முடிவுக்கு வருமா, அல்லது மேலும் தீவிரமாவதா என்பது…
ஜம்மு காஷ்மீரில் நேற்று ராணுவ வாகனம் விபத்து – வீரர்கள் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில் நேற்று காலை ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் திடீரென விபத்துக்குள்ளானது. மலைப்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த விபத்தில் சில ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் , அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடத்திற்கு ராணுவ உயரதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகை தருகிறார். அவரது சென்னை வருகையையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலத்தப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெறும் இந்த நிகழ்வின் மூலம், தேசிய ஜனநாயக கூட்டணியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான…
தவெக பிரச்சாரம் 26 முதல் தொடக்கம்
தவெக தேர்தல் பிரச்சாரக் குழு ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறும்போது, தவெக சார்பில் 26-ம் தேதி பிரசார பயணம் தொடங்குகிறோம். 234 தொகுதிகளிலும் செயல் வீரர் கூட்டம் நடத்தி பணிகளை மேற்கொள்வோம் என்றார்.
வடபழனி – பூந்தமல்லி இடையே பிப்ரவரிக்குள் மெட்ரோ ரயில்கள் இயக்கம்!
வடபழனி – பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான இறுதிக்கட்ட ஒப்புதலை இந்திய ரயில்வே வாரியம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தற்போது சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை இரு வழித்தடங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் மூன்றாவது வழித்தடமாக மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை 26 கிலோமீட்டர் தொலைவிற்கு மெட்ரோ பாதை…
முதல் டி20 போட்டி: இந்தியா – நியூசிலாந்து இன்று மோதல்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. நாக்பூரில் இன்று இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. உலகக்கோப்பை தொடர் நெருங்கி வருவதால் இந்த தொடர் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்துக்கு ஆதரவாக டி20 உலகக் கோப்பையை புறக்கணிக்கிறதா பாகிஸ்தான்?
வங்கதேசத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) டி20 உலகக் கோப்பைத் தொடரை புறக்கணிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் குறித்து பாகிஸ்தான் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடர், வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள அணிகள், இந்தியாவின் தில்லி, சென்னை உள்ளிட்ட ஐந்து…
‘மக்களுக்கான மாற்றமே என் அரசியல் பயணம்’ – ஜோஸ் சார்லஸ் மார்டின்
லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், தனது அரசியல் பயணத்தின் நோக்கம் குறித்து பேசினார். மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை கொண்டு வரவே, தனது சொந்த தொழிலை விட்டு விலகி அரசியலுக்கு வந்ததாக அவர் தெரிவித்தார். பழைய சிந்தனைகளுக்குள் சிக்கி இருந்தால் புதுச்சேரியின் வளர்ச்சி சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார். வளர்ச்சி, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன், வெளிநாடுகளைப் போல புதுச்சேரியை மாற்றுவதே தனது கனவு எனவும், அதற்காக புதிய சிந்தனையுடன் செயல்பட வேண்டியது…
பொங்கல் விடுமுறை முடிவு _சென்னையில் போக்குவரத்து நெரிசல்
பொங்கல் விடுமுறை முடிவடைந்ததை தொடர்ந்து, சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்த மக்கள் சென்னை நோக்கி திரும்பியதால் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உளுந்தூர்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் மெதுவாக நகர்ந்தன. திரும்பும் பயணிகள் அதிகரித்த நிலையில், போக்குவரத்தை சீர்செய்ய காவல்துறையினர் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதிய வாக்காளர்கள் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி உள்ளிட்ட விவரங்களை மாற்றுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள் சரி செய்யவும், தகுதியானவர்கள் அனைவரும் பட்டியலில் இடம் பெறவும், பொதுமக்கள் ஜனவரி 18க்குள் உரிய படிவங்கள் மூலம் விண்ணப்பிக்க தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கரூர் சம்பவம்: சிபிஐ முன்பு மீண்டும் ஆஜராகும் விஜய்
கரூரில் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 12-ம் தேதி டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அடுத்த கட்ட விசாரணைக்காக மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், விஜய் நேற்று டெல்லி சென்றுள்ளார். இன்று இரண்டாவது முறையாக சிபிஐ முன்பு அவர் ஆஜராக உள்ளார்.
ஆண்கள் மட்டும் பங்கேற்ற விநோத பொங்கல் விழா
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ள நைனார்மடம் கிராமத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் அமைந்துள்ள வெல்லந்தாங்கி அய்யனார் கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்கள் மட்டுமே கலந்துகொண்ட பொங்கல் வைக்கும் விநோத திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில், பொங்கல் வைப்பதற்காக ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதுப்பானையை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். பின் குளக்கரை ஓரம் அடுப்பு தோண்டி அதில் இருந்து பனை ஓலை மூலம் தண்ணீர் எடுத்து வெல்லந்தாங்கி அய்யனார் கோவில்…
பாரம்பரிய உடையில் பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பாரத் நிவாஸில் நேற்று பொங்கல் பண்டிகை மற்றும் மார்கழி மாதத்தின் 30-வது நாள் நிறைவு விழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாக இசை அம்பலம் பள்ளி மாணவர்களின் வீரமிக்க சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், ஆரோவில்லைச் சேர்ந்த டாலியா ஸ்ரீ என்ற சிறுமி ஆண்டாள் வேடமணிந்து திருப்பாவை பாடலுக்கு நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. விழாவில் ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான டாக்டர் ஜெயந்தி எஸ்.ரவி…
குத்தாலம் அற்புத குழந்தை இயேசு ஆலய ஆண்டுத் திருவிழா கோலாகலம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அற்புத குழந்தை இயேசு ஆலய ஆண்டுத் திருவிழா ஜனவரி 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து எட்டு நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான சிறப்பு திருப்பலி மற்றும் அலங்கார திருத்தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதைமுன்னிட்டு அற்புத குழந்தை இயேசு ஆலய பங்குத்தந்தை சேவியர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த சிறப்பு திருப்பலியில் உலக…
காரைக்கால் கார்னிவல் கொண்டாட்டம்- ரூ. 2 கோடி செலவில் பிரமாண்டம்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை, கலைப்பண்பாட்டு துறை மற்றும் வேளான்துறை சார்பில் கார்னிவல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, இந்த ஆண்டிற்கான கார்னில் திருவிழா சுமார் ரூ.2 கோடி மதிப்பில் இன்று (16-01-2026) முதல் வரும் ஞாயிறு (18-01-2026) வரை என 3 நாட்கள் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதைதொடர்ந்து, நேற்று இதற்கான ஆயத்தப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்றது. இதில், ரோடு ஷோ,…
கரும்பு அலங்காரத்தில் காட்சியளித்த வாராஹி அம்மன்
சாமிப்பிள்ளை தோட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு பரிகார வாராஹி அம்மன் கரும்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். புதுச்சேரி மாநிலம் சாமிப்பிள்ளை தோட்டத்தில் அருள்மிகு மகாசக்தி பரிகார வாராஹி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் விஷேச நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இதன்படி, பொங்கல் திருநாளை முன்னிட்டு இக்கோவிலில் உள்ள வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இப்பூஜையில், அம்மனுக்கு வண்ணப்புடவை அணிவிக்கப்பட்டு கரும்பு மற்றும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, பாராணயம் பாடி தீபாராதனை…
ஆட்டோ மீது பைக் மோதி 2 மாணவர்கள் உயிரிழப்பு
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் மற்றும் காரைக்கால் நகரப்பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் இருவரும் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில், இருவரும் கிழக்கு புறவழிச்சாலையில் உள்ள தேநீர் கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த ஆட்டோ மீது மோதியுள்ளது. இதில், இருவரும் சுமார் 50 மீட்டர் வரை இழுத்து செல்லப்பட்டதால் தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த காயம்…
‘ஜனநாயகன்’ தணிக்கை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்ப தணிக்கை வாரியம் கடந்த 5ஆம் தேதி பரிந்துரை செய்தது. இதனை எதிர்த்து படத்தை தயாரித்த கே.வி. புரொடக்ஷன் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரியத் தலைவர் உத்தரவை ரத்து செய்து, படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என…
மதுரையில் ஜல்லிக்கட்டு உற்சாகம் – அவனியாபுரத்தில் போட்டிகள் தொடக்கம்
மதுரை மாவட்டத்தில் பொங்கல் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் வாடிவாசலுக்குள் சீறிப்பாய, மாடு பிடி வீரர்கள் தங்களின் திறனை வெளிப்படுத்தி போட்டியிட்டு வருகின்றனர். வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகனங்கள், தங்க நாணயங்கள் உள்ளிட்ட மதிப்புமிக்க பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவ குழுக்கள், ஆம்புலன்ஸ் வசதிகள், கண்காணிப்பு பணிகள் ஆகியவை முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பொது…
ஸ்பெயினுக்கு முதல் இளம் ராணி – புதிய வரலாறு
ஸ்பெயின் நாட்டின் அரச மரபில் முக்கிய திருப்பமாக, இளவரசி லியோனோர் எதிர்கால ராணியாக பொறுப்பேற்க உள்ளார். 150 ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்பெயினை ஆளும் முதல் இளம் பெண் என்ற பெருமையை அவர் பெறுகிறார். அரச குடும்பத்தின் பாரம்பரிய நடைமுறைகளுக்கு ஏற்ப, அரசியல் மற்றும் ராணுவ பயிற்சிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். 20 வயதான லியோனோர், நாட்டின் எதிர்கால தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராகி வரும் நிலையில், இந்த நிகழ்வு ஸ்பெயின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க கட்டமாக பார்க்கப்படுகிறது .
LJK மகளிர் அணி சார்பில் பொங்கல் விழா – திருநங்கை சமூகத்துடன் கொண்டாட்டம்
புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் உள்ள அன்னலட்சுமி திருநங்கை சமூகத்துடன் இணைந்து, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் , ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின்படி மாநில மகளிர் அணி சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருநங்கைகளுடன் சேர்ந்து பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு, அவர்களுடன் அன்பும் ஒற்றுமையும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியின் போது திருநங்கைகளுக்கு புடவை, மளிகைப் பொருட்கள் மற்றும் காலண்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பொங்கல் விழா முன்னெடுப்பு: முதலமைச்சரை சந்தித்த LJK தலைவர்
லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் வரும் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் பொங்கல் விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் நேரில் சந்தித்தார்.இந்த சந்திப்பின் போது, பொங்கல் விழாவில் பங்கேற்குமாறு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்த அவர், சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த மரியாதைச் சந்திப்பு, பொங்கல் விழா தொடர்பான அனுமதி மற்றும் ஒருங்கிணைப்பு குறித்து நல்ல…
இலங்கை கடற்படை கைது பிரச்சனைக்கு தீர்வு முயற்சி – LJK தலைவர் பேச்சுவார்த்தை
இலங்கை கடற்படையினரால் காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில், காரைக்கால் மீனவர்களின் பிரதிநிதிகள், இலங்கை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு, லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.இந்த பேச்சுவார்த்தையில், மீனவர் கைது சம்பவங்களை தடுக்கும் வகையில் மத்திய–மாநில அரசுகள், இலங்கை அரசு மற்றும் மீனவர் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு குழு அமைக்க…
புதுவையில் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி – LJK தலைவர் அறிவிப்பு
புதுவை , லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா, LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் நடைபெற்றது. விழாவில் 1000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கலந்து கொண்டு , 500 மண் பானைகளில் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். விழாவின் தொடக்கமாக, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குத்துவிளக்கேற்றி சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் பழங்குடியின மக்களுடன் இணைந்து மண் பானையில் பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடினார். விழாவில்…
பழங்குடியின மக்களுடன் பொங்கல் விழா – குத்துவிளக்கேற்றி கொண்டாடிய LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்
புதுச்சேரியில், பழங்குடியின மக்களுடன் இணைந்து LJK கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார். விழாவின் தொடக்கமாக அவர் குத்துவிளக்கேற்றி, மண் பானையில் பொங்கல் வைத்து விழாவை ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சியில் பழங்குடியின மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு, பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். விழா முழுவதும் மகிழ்ச்சியும் ,உற்சாகமும் நிறைந்த சூழல் காணப்பட்டது. பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக தப்பாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன்,…
மகளிர் பிரீமியர் லீக்: டெல்லியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை
மகளிர் பிரீமியர் லீக் (WPL) T20 2026 தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸை எதிர்த்து அபார வெற்றி பெற்றுள்ளது. மும்பையில் நேற்று நடைபெற்ற தொடரின் 3-வது லீக் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதிரடியாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களை குவித்தது. மும்பை அணியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சிறப்பான ஆட்டத்தை…
கிரிக்கெட் உலகில் புதிய உச்சம்: ரோஹித் சர்மாவின் சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனையை பதிவு செய்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா, தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் இந்த சாதனையை எட்டினார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க வீரராக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை இதுவரை வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் வைத்திருந்தார். 328 சிக்ஸர்கள்…
சேதுசெல்வம் – LJK தலைவர் சந்திப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய அக்கட்சியின் முன்னாள் துணைச் செயலாளரும், ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலாளருமான சேது செல்வத்தை, லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட அவ்வை நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். முன்னதாக சேதுசெல்வத்தின் இல்லத்திற்கு வருகை தந்த லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு, பட்டாசுகள் வெடித்து, மலர் தூவி உற்சாகமான வரவேற்பு…
பாதுகாப்பு காரணமாக சதுரகிரி கோவிலுக்குச் செல்ல தடை
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவில் அமைந்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு, மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்களிலும், மழை பாதிப்பு இல்லாத சாதாரண நாட்களிலும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஓடைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சதுரகிரி மலைப்பாதையில்…
க*சா பயன்பாடு அதிகரிப்பு – திமுக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்
சென்னை கண்ணகி நகர் அருகே க*சா விற்பனையில் ஈடுபட்டதாக திமுகவைச் சேர்ந்த பெண் நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக , அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், க*சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஊக்குவிக்கும் திமுக அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாகவும், குற்றப் பின்னணி உள்ளவரை முறையாக கண்காணிக்கத்…
சென்னையில் காங்கிரஸின் அமைதிப் போராட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மத்திய அரசு “வளர்ச்சியடைந்த பாரதம் வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் (விபி–ஜி ராம் ஜி)” என மாற்றியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதாக கூறி, இந்த முடிவு ஏழை மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எதிரானது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.இந்த பெயர் மாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து, மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சி…
“இந்தியா இந்து நாடு; பிரதமரும் இந்துவே” – சர்ச்சை கருத்து
மராட்டியத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஓவைசி தெரிவித்த கருத்துகளுக்கு அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிலளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, எந்த குடிமகனும் பிரதமராக பதவியேற்க முடியும் என்றும், அதற்கு சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இந்தியா ஒரு இந்து நாடு என்றும், இந்து நாகரிகத்தின் அடிப்படையில் வளர்ந்த நாடு என்றும் கூறிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, இந்தியாவின் பிரதமர்…
பி.எஸ்.எல்.வி. சி-62 தயாராகிறது : இன்று கவுண்ட்டவுன் தொடக்கம்
பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டின் ஏவலுக்கு தேவையான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இன்று காலை முதல் கவுண்ட்டவுன் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வானிலை மற்றும் தொழில்நுட்ப நிலைகள் சாதகமாக இருந்தால், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் இயங்காது: அரசு அறிவிப்பு
தமிழகம் முழுவதும் இயங்கும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூன்று நாட்கள் கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும் என கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, ஜனவரி 16-ஆம் தேதி (திருவள்ளுவர் தினம்), ஜனவரி 26-ஆம் தேதி (குடியரசு தினம்) மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதி (வடலூர் வள்ளலார் நினைவு தினம்) ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீச்சு : பாதுகாப்பு காரணமாக விரைவு ரயில் நிறுத்தம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசி வருவதால், அயோத்தியாவில் இருந்து வந்த விரைவு ரயில், மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது . இதனால் ரயில் போக்குவரத்தில் இடையூறு ஏற்படும் அபாயம் உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமை சீரான பின்னர் மட்டுமே ரயில் மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் பாதுகாப்பாக இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இமாசலில் பஸ் விபத்து: 14 பேர் பலி; பிரதமர் இழப்பீடு
இமாசல பிரதேசத்தில் பயணிகள் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது . இதுவரை 14 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்து சென்று, மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்ததுடன்,…
சென்னையில் மர்மமாக சாகும் காகங்கள் – பீதியில் மக்கள்
சென்னை அடையாறு இந்திரா நகர் பூங்காவில் கடந்த சில நாட்களாக காகங்கள் மர்மமான முறையில் இறந்து வருகின்றன. வானில் பறந்துகொண்டிருந்த காகங்கள் திடீரென கீழே விழுந்து உயிரிழப்பதால் பூங்காவிற்கு வரும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பூங்கா காவலாளி குட்டி கூறுகையில், நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு முன்பே காகங்கள் விழுந்து இறக்கத் தொடங்கியதாகவும், தினந்தோறும் அதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார் . தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், செத்துப்போன காகங்களை சேகரித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்…
திருப்பூரில் முருகன் கோவிலில் போராட்டம்; 200 பேர் கைது
திருப்பூர் மாவட்டம், ஈட்டிவீரம்பாளையம் அருகே குமரன் குன்று முருகன் கோவிலை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் முயற்சி செய்த போது, மக்கள் மற்றும் இந்து முன்னணி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் தடுப்பு ஏற்படுத்திய நிலையில் இந்து முன்னணியினரும் போலீசாரும் மோதியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த மோதலில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்து, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட சுமார் 200 பேர்…
ஒரே பாறை, உலக சாதனை: 3,000 கி.மீ. பயணத்தில் உருவான மகா சிவலிங்கம்
பீகாரில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘விராட் ராமாயணக் கோயில்’ திட்டத்தின் முக்கிய கட்டமாக, 33 அடி உயரம் கொண்ட பெரிய சிவலிங்கம் பீகாரை சென்றடைந்துள்ளது. இந்த சிவலிங்கம், தமிழகத்தின் மகாபலிபுரத்தில் இருந்து சுமார் 3,000 கிலோமீட்டர் தூரம் பயணித்து அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நவம்பர் 21 அன்று மகாபலிபுரத்தில் தொடங்கிய இந்தப் பயணம், 96 சக்கரங்கள் கொண்ட சிறப்பு டிரக் மூலம் மெதுவாக கொண்டு செல்லப்பட்டது. சேதம் ஏற்படாமல் இருக்க, தினமும் 60 கி.மீ. மட்டுமே பயணிக்கப்பட்டது….
2026 விண்வெளிப் பயணம் ஆரம்பம்! 12-ஆம் தேதி புறப்படும் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி-C62
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), 2026 ஆம் ஆண்டுக்கான தனது முதல் விண்வெளி பயணமாக பி.எஸ்.எல்.வி–சி62 ராக்கெட்டை ஜனவரி 12 ஆம் தேதி காலை 10:17 மணிக்கு ஏவ உள்ளது. இந்த ஏவல், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து நடைபெற உள்ளது. இந்த ராக்கெட், குறிப்பிட்ட விண்வெளி திட்டத்தை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்பொழுது அனைத்து தொழில்நுட்ப சோதனைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக…
ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
மதுரை உயர்நீதிமன்ற கிளை, தமிழகத்தில் நடைபெறும் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசு மேற்பார்வையில் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 15ஆம் தேதி நடைபெறவிருந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கிராம நிர்வாகம் நடத்த அனுமதி கோரி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டிகளை தனிநபர்கள் அல்லது உள்ளூர் குழுக்கள் நடத்துவதால் பல்வேறு சிக்கல்கள் உருவாகுகின்றது என்பதைக் கருத்தில் கொண்டு, அரசே நேரடியாக பொறுப்பேற்று போட்டிகளை நடத்துவது சிறந்தது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், அணிவகுப்பு, அவனியாபுரம், பாலமேடு மற்றும்…
சென்னை விமான நிலையத்தில் விரைவில் ஸ்மார்ட் ட்ராலிகள்
சென்னை விமான நிலையம் இனி ஸ்மார்ட் ட்ராலிகளுடன் பயணிகளை வரவேற்க தயாராகி வருகிறது. இந்த புதிய தொழில்நுட்ப வசதி, பயணிகளுக்கு விமான நிலையத்திற்குள் கடைகளில் ஷாப்பிங் செய்யவும், உணவகங்களில் சாப்பிடவும் உதவும். இந்த ஸ்மார்ட் ட்ராலிகள் , பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் . இவை சிறிய, தொழில்நுட்பம் நிறைந்த வண்டிகள். இவற்றில் ஒரு திரை பொருத்தப்பட்டிருக்கும். பயணிகள் தங்கள் போர்டிங் பாஸை இந்த திரையில் ஸ்கேன் செய்ய வேண்டும். அப்படி ஸ்கேன் செய்தவுடன், விமானம்…
2026 தேர்தல்: அதிமுக–பாஜக கூட்டணியில் அன்புமணி பாமக
சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே இறுதி பேச்சுவார்த்தை இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில், இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. பா.ம.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமதாஸ் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றார் அன்புமணி ராமதாஸ் . இதன் மூலம் ராமதாஸ் விஜய் உடன்…
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க புதிய முறை அமல்!
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) பயணிகள் எதிர்கொள்ளும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் அதிகப்படியான கூட்டத்தை சமாளிக்க, தானியங்கி கட்டண வசூல் (AFC) கேட்கள் மற்றும் கூடுதல் கட்டண வசூல் கவுண்டர்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், அண்ணா நகர் கிழக்கு, ஷெனாய் நகர் உள்ளிட்ட முக்கிய நிலையங்களிலும் விரைவில் கூடுதல் கேட்கள் அமைக்கப்பட உள்ளன. தியாகராய கல்லூரி மெட்ரோ ரயில்…
தமிழகத்தில் பொங்கல் பரிசு நாளை முதல் விநியோகம்
பொங்கல் பரிசுத்தொகுப்பு உடன் ரூ.3,000 பரிசுத்தொகை விநியோகத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சென்னை ஆலந்தூரில் உள்ள நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு வழங்க உள்ளார். அதன் பின்பு மற்ற பகுதிகளிலும் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் தமிழகம் முழுவதும் அணைத்து வீடுகளுக்கும் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு – உத்திரபிரதேசம் மாநில வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ள நிலையில் இன்று சந்திப்பு டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க் சாலையில் அமைந்துள்ளது பிரதமர்களுக்கான அதிகாரப்பூர்வ அரசு மாளிகை. அங்கு இன்று பிரதமர் நரேந்திர மோடியை உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் சந்தித்து சுமார் ஒரு மணி நேரங்களுக்கு மேல் நீண்ட ஆலோசனையை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையின் போது…
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினற்கு LJK சார்பில் நிதி உதவி
காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவர்கள் நேற்று முன்தினம் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரை லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடிமேடு பகுதியில் மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்த அவர் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மீட்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்….
LJK வில் இணைந்த பாஜக மகளிர் அணியினர்
காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த பாஜக மகளிர் அணி மாவட்ட துணை தலைவி பிருந்தா முருகானந்தன் இன்று காலை லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து கட்சியில் இணைந்த நிலையில், அவரது தந்தை சேதுராமன் மற்றும் தங்கை தீபா ஆகியோரும் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து தங்களை லட்சிய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டனர். உடன் லட்சிய ஜனநாயக கட்சியின் மண்டல பொதுச்செயலாளர் அப்துல் பாஷித்,…
இலங்கை கடற்படையினரால் 3 பேர் கைது
காரைக்கால் அடுத்த கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 29ம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 11 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை மீன் பிடித்து கொண்டிருந்த போது 11 காரைக்கால் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
தச்சங்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு
தமிழர்களின் கலாச்சார – பாரம்பரியத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுவதும் விமர்சையாக நடைபெற தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் வருகின்ற ஜனவரி 3ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அந்த போட்டியில் பங்கேற்க உள்ள காளையர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியது. வீரர்கள் டோக்கன்களை பெற முண்டியடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது….
புதுவையில் தொடரும் விபத்துக்கள் – மக்கள் அச்சம்
புதுவையில் தொடர் சாலை விபத்துகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுவை தவளக்குப்பம் அடுத்த அபிஷேகப்பாக்கம் சேத்திலால் நகரை சேர்ந்த விக்னேஷ், சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், ஊருக்கு வந்திருந்த நிலையில், நண்பர் தனுஷுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்திசையில் வந்த கேரளாவை சேர்ந்த சஞ்சய் குமாரின் பைக்குடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூவரும் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், விக்னேஷ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்….
LJK தலைவரின் மகளிருக்கான வாக்குறுதிகள் விளக்கம்!
லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் ஆலோசனைப்படி, உழவர்கரை தொகுதிக்குட்பட்ட உழவர்கரை பகுதி பெண்களுடன் சந்திப்பு நடத்திய கட்சியின் மகளிர் அணி தலைவி பிரபா தேவி லட்சிய ஜனநாயக கட்சியின் மகளிர் நலனுக்கான வாக்குறுதிகள் மற்றும் LJKவில் மகளிருக்கான முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து, அதே தொகுதிக்குட்பட்ட ஜவஹர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், லட்சிய ஜனநாயக கட்சியின் ஆறு முக்கிய மகளிர் திட்டங்கள் குறித்து அப்பகுதி மகளிர் குழு பெண்களிடம்…
லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் புத்தாண்டு வாழ்த்து!
கால் நூற்றாண்டுக்கும் மேலாக பின்தங்கி இருக்கும் புதுவையின் வளர்ச்சிக்கான காலம் கனிந்துள்ளது என லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2026 தேர்தலுக்கான களத்தில் லட்சிய ஜனநாயகக் கட்சி புதுவை மக்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது எனவும் லட்சிய ஜனநாயகக் கட்சிக்கும் இதுதான் புத்தாண்டு எனவும் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார் .
PAN-ஆதார் இணைப்புக்கு இன்றே கடைசி நாள் – வருமான வரித் துறை எச்சரிக்கை
PAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே (31.12.25) கடைசி நாள் என வருமான வரித் துறை அறிவித்துள்ளது. இதுவரை PAN-ஆதார் இணைப்பை மேற்கொள்ளாதவர்கள், இன்றைக்குள் ரூ.1,000 தாமதக் கட்டணம் செலுத்தி ஆதார் எண்ணை PAN எண்ணுடன் இணைக்க வேண்டும் என வருமான வரித் துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் PAN-ஆதார் இணைப்பை செய்யத் தவறினால், PAN எண் செல்லாது (Inactive) என அறிவிக்கப்படும் என்றும், இதனால் வருமான வரி தொடர்பான சேவைகள், வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட…
இலங்கைக்கு எதிரான 5வது டி20 போட்டியிலும் இந்திய மகளிரணி வெற்றி – தொடரை முழுமையாக கைப்பற்றியது
இலங்கைக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய மகளிரணி வெற்றி பெற்று, தொடரை முழுமையாக கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இந்திய அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர் அரை சதம் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அவரது சிறப்பான ஆட்டத்துக்காக அவர் ஆட்ட நாயகி விருதைப் பெற்றார். மேலும், தொடரில் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக, தொடர் நாயகி விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம்,…
புத்தாண்டு கொண்டாட்டம் முன்னிட்டு சென்னையில் விரிவான போக்குவரத்து மாற்றங்கள் – காவல்துறை அறிவிப்பு
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை முக்கிய பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றங்கள் அமல்படுத்தப்படுவதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, காமராஜர் சாலையில் போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை இன்று இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும். மேலும், அனைத்து மேம்பாலங்களிலும் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள்…
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டல் – ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிப்பு
புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இன்று நள்ளிரவு கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்காக, தமிழகம், பெங்களூர், சென்னை, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருகை தருகின்றனர். இதனால் புதுச்சேரி நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடற்கரை சாலை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். மேலும், காலை…
H-1B விசாவுக்கு தடை: டிரம்ப் அறிவிப்பு – இந்தியாவில் 32 ஆயிரம் பேரை பணியமர்த்திய அமெரிக்க நிறுவனங்கள்
H-1B விசாவிற்கு தடை விதிக்க இருப்பதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்களின் அமெரிக்க வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே, Meta, Apple, Google, Amazon, Microsoft, Netflix உள்ளிட்ட முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்தியாவில் மொத்தம் 32 ஆயிரம் பேரை பணியில் அமர்த்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், 32 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்காவிற்கு சென்று வேலை செய்வதற்குப் பதிலாக, இந்தியாவிலிருந்தே அமெரிக்க நிறுவனங்களுக்கு சேவை…
9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு
தமிழக அரசில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய பணியிடமாற்றங்களை மேற்கொண்டு அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. அதன்படி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக பணியாற்றி வந்த சத்யபிரத சாகு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையராக இருந்த பழனிசாமி, கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையராக பணியாற்றிய கஜலட்சுமி, நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்….
தூய்மை பணியை தனியாருக்கு ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு – அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது
சென்னை அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்களின் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவை கண்டித்து, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணியாக சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூய்மை பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும், கைது செய்ய மறுத்து சாலையில் வாகனங்களின் அடியில் படுத்து உருண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்….
புதுவையில் போலி மாத்திரை விவகாரம்: மருந்தகங்கள் முற்றுகை – அதிமுக கடும் கண்டனம்
புதுச்சேரி:புதுச்சேரியில் போலி மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகார் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 13 குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. புதுவை அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பில் பல்வேறு இடங்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி புஸ்ஸி வீதியில் செயல்பட்டு வந்த ‘செம்பருத்தி மருந்தகம்’ மற்றும் ‘ஸ்ரீ குகா மருந்தகம்’ ஆகியவற்றில் போலி மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து,…
“அதிமுக மக்களுக்கு அடிமையாக இருக்கும் கட்சி” – கோவையில் அண்ணாமலை பேச்சு
கோவை கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்தார். அவரது பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேச்சின்போது அண்ணாமலை கூறுகையில்,“என்னைப் பொறுத்தவரை அதிமுக ஒரு அடிமைக் கட்சிதான். ஆனால் அது யாருக்கும் அல்ல; மக்களை எஜமானர்களாக மதித்து, மக்களுக்கு அடிமையாக இருக்கும் கட்சி அதிமுக” என தெரிவித்தார். மேலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) குறித்தும் அவர்…
Recap of 2025: அரசியல் மாற்றங்கள், பேரிடர்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் – இந்தியாவையும் உலகையும் உலுக்கிய ஆண்டு
2025 ஆண்டு இந்தியாவுக்கும் உலகுக்கும் பல்வேறு வகையில் மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. அரசியல் களத்தில் புதிய கட்சிகள், அதிர்ச்சியூட்டிய குற்றச் சம்பவங்கள், இயற்கை பேரிடர்கள், பாதுகாப்பு மற்றும் சைபர் அச்சுறுத்தல்கள் என பல நிகழ்வுகள் மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. அரசியல்: புதிய கட்சிகள், புதிய அரசியல் போக்கு 2025 ஆம் ஆண்டில் தமிழ் திரையுலக நடிகர் விஜய் அரசியலில் முழுமையாக களமிறங்கி, புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். அவரது அரசியல் பயணம் தமிழக…
கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம் திறப்பு – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைப்பு
கோவையில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த மைதானத்தை திறந்து வைத்தார். ஆர்.எஸ்.புரம் பகுதியில், ரூ.9.67 கோடி மதிப்பீட்டில், 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. வீரர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், செயற்கை புல்வெளி (Artificial Turf) உள்ளிட்ட நவீன வசதிகளுடன் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஹாக்கி போட்டிகளை…
பொங்கல் பரிசுத் தொகுப்பு: ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2.22 கோடி குடும்பங்கள் பயன்
தமிழகத்தில் வரவுள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளனர். இதற்காக மொத்தமாக 22,291 டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்பில், பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட உள்ள நிலையில், பொங்கல் வேட்டி மற்றும் சேலை கொள்முதல் பணிகள் 85…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் கடும் சரிவு
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. சவரனுக்கு ரூ.3,360 குறைந்ததால், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,00,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையும் ரூ.420 குறைந்து, இன்று ரூ.12,600 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தங்க விலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் குறைவு, நகை வாங்குவோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.23 குறைந்து, இன்று ரூ.258க்கு…
புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் நள்ளிரவு வரை இயங்கும் மதுபான கடைகளுக்கு கூடுதல் கட்டணம் – கலால் துறை அறிவிப்பு
புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, புதுச்சேரியில் மதுபான கடைகள் மற்றும் பார்கள் நள்ளிரவு வரை இயங்க அனுமதி வழங்கப்படுவதாக கலால் துறை அறிவித்துள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலால் துறை அறிவிப்பின் படி, பார் வசதி இல்லாத சில்லறை மதுபான விற்பனை கடைகள் இரவு 11.30 மணி வரை இயங்க ரூ.10,000 கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல், பார் வசதியுடன் கூடிய சில்லறை விற்பனை கடைகள், வழக்கமான நேரத்துக்கு மேலாக கூடுதலாக…
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் லட்சிய ஜனநாயக கட்சியின் வாக்குறுதி விளக்கக் கூட்டம்
புதுச்சேரி லட்சிய ஜனநாயக கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் தீர்மானங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில், புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை தொகுதியில் விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெருமளவில் மகளிர் மற்றும் சுயஉதவி குழு பெண்கள் கலந்து கொண்டு, கட்சியின் இலட்சியங்கள் மற்றும் பெண் இலட்சியத் தலைவர்களின் பெயரில் அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து விரிவான விளக்கங்களை கவனத்துடன் கேட்டனர். விளக்க உரை நிகழ்ச்சியில் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று, கட்சியின் செயல்பாடுகளை பாராட்டினர். கூட்டத்தில் கலந்து கொண்ட மகளிர்,…
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி திருநாளை முன்னிட்டு, முதன்மை வைணவ திருத்தலமான திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறக்கப்பட்டது. பரமபத வாசல் வழியாக எழுந்தருளிய ஸ்ரீ ரங்கநாத பெருமாளை, “கோவிந்தா… கோவிந்தா…” என்ற கோஷங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் திரண்டதால், சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, பாதுகாப்பு மற்றும் கூட்ட…
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலமானார்
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், தேசத்தின் தலைவருமான கலிதா ஜியா (80) உடல்நலக் குறைவால் காலமானார். நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த கலிதா ஜியா, மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்ததாக வங்கதேச அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவரது மறைவுச் செய்தி வங்கதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த கலிதா ஜியா, நாட்டின் முன்னாள் பிரதமராக பதவி வகித்து, பல்வேறு முக்கிய அரசியல்…
புடின் வீடு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் முயற்சி ? – ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வசிப்பிடத்தை இலக்காகக் கொண்டு உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த தாக்குதல் முயற்சியில் உக்ரைன் தரப்பில் இருந்து 91 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட இருந்ததாகவும், அவற்றை ரஷ்யாவின் வான் பாதுகாப்புப் படை முற்றிலும் அழித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாக்குதல் முயற்சி தோல்வியடைந்ததால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ரஷ்யாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உக்ரைன் அரசு இந்த…
ஒரு சிகரெட் ரூ.72 உயர்வு.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள கலால் சட்டத்திருத்தத்தால், புகையிலைப் பொருட்களின் விலை கணிசமாக உயரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் காரணமாக, தற்போது ரூ.18க்கு விற்பனை செய்யப்படும் ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 வரை உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், மெல்லும் புகையிலைக்கு விதிக்கப்படும் வரியும் தற்போதுள்ள 25 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம் புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக…
கரூர் விஜய் பிரச்சார கூட்டம் வழக்கு: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணை
கரூர் விஜய் பிரச்சார கூட்டத்தின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், டெல்லியில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) அலுவலகத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்காக, த.வெ.க. (தமிழக வெற்றி கழகம்) தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடமும் சிபிஐ அதிகாரிகள் டெல்லி அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள்…
LJK வாக்குறுதிகள் விளக்கவுரை கூட்டம் வில்லியனூரில் நடைபெற்றது
வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆத்துவாய்க்கால்பேட்டில், LJK கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பான விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பொதுமக்களுக்கு வாக்குறுதிகளின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. வில்லியனூர் JCM மன்றத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சமூக சேவகி கிரிஜா விளக்கவுரையை தொகுத்து வழங்கினார். அவர், மக்களின் அன்றாட தேவைகள், பெண்களின் முன்னேற்றம் மற்றும் சமூக நலத்திட்டங்கள் குறித்து வாக்குறுதிகள் எவ்வாறு அமையவுள்ளன என்பதை தெளிவாக எடுத்துரைத்தார்….
உலகின் பழமையான மொழி தமிழ்: பிரதமர் மோடி பெருமிதம்
உலகிலேயே பழமையான மற்றும் செழுமையான மொழிகளில் ஒன்றாக தமிழ் திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 129-வது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தமிழ் மொழியின் தொன்மை மற்றும் அதன் பண்பாட்டு முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக, உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் தமிழ் மொழியை கற்றுக்கொள்ளும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அங்குள்ள மக்கள் தமிழ் மொழி மற்றும் தமிழர் பண்பாட்டின் மீது பெரும் ஈர்ப்பு காட்டி வருவதாகவும் பிரதமர் மோடி…


